Breaking News :

Friday, April 19
.

விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்?


💐 பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங்களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்கு தெரியும்.

💐 இவை மட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

💐 முதலில் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள் அரசமர நிழலும், வன்னிமர நிழலும் ஆகும்.

வன்னிமரப் பிள்ளையார் :

வன்னிமர விநாயகர் வலஞ்சுழியாக இருப்பது பெரும்பாக்கியம். வடக்கு நோக்கியிருப்பின் மிகவும் விசேஷமானது. அவிட்ட நட்சத்திரம் தோறும் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து ஏழைக் கன்னிப்பெண்களுக்கு உரிய தானம் அளித்துவர நல்லவரன் கிட்டித் திருமணம் கைகூடும். வாகன வியாபாரிகள் அவிட்ட நட்சத்திரத்தில் வன்னி விநாயகருக்குப் பொரியைப் படைத்து நூற்றுக் கணக்கான குழந்தைகட்கு அளித்திட தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.

💐 அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும்.

புன்னை மரப் பிள்ளையார் :

புன்னை மரப் பிள்ளையார்:
ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும்.

💐 ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை எளியவர்களுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.

மகிழ மரப் பிள்ளையார் :

மகிழ மரத்தடி பிள்ளையார்
மகிழமரத்தடி பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடு சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர். நாவல் மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும்.

💐 இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

மாமரப் பிள்ளையார் :

மாமர விநாயகர் ஞான வடிவானவர். எனவே, பல ஞானியரும் இங்கு வந்து அவரைத் தியானித்து அருள் பெற்றனர். இதனால் விநாயகரின் பெருமை மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது. இங்கு விநாயகரை வழிபட்ட திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள், 'இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை மெய்ப்பிக்க இங்கே, மாமரத்தில் எழுந்தருளியிருக்கிறான்' என்று கூறிப் போற்றினார்.

💐 இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதி காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால் கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.

வேப்ப மரத்து விநாயகர் :

வேப்ப மரத்துப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிபிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் மிஞ்சும் விதத்தில் செல்வம் வந்து சேரும்

💐 உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.

ஆலமரப் பிள்ளையார் :

💐 ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வில்வ மரப் பிள்ளையார் :

💐 சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வந்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.

அரசமரப் பிள்ளையார் :

💐 பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும்...


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.