Breaking News :

Tuesday, May 21
.

முருகப் பெருமான் தை பூசம் வரலாறு


தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவி ழாக்களில் முக்கியமானது தைப் பூசம் ஆகும்.

 

 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்ச த்திரம் பூசம் ஆகும். தை மாதப் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொ ண்டாடப்படுகி ன்றது. தை ப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக  இருக்கும்.

 

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றையதினம் குழந்தைகளுக் கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்ற வற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள்.

 

மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூ ரச்ச ட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற் றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலு ம், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழா க்கள் நடை பெறுகின்றன.

 

தைமாதம் உத்தராயண காலத்தின் ஆரம் பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர் களின் காலைப் பொழுதாகும்.பூரணை தினத்தில்; சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க ”தைப்பூச திருநாள்” ஆமைகின்றது. இச் சிறப்பு மிக்க இந்த தினம் இவ் வருடம் 25.01.2024 வியாழன் அன்று அமைகிறது. 

 

தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியி ன் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின் றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்த தாகவும் ஐதீகம். சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில் லை என்று கூறபடுகி ன்றது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்த தாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ் ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

 

சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத் தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். 

 

எனவே உலக இயக்கத்தி ற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூத ங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனித மிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டு வரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.

 

இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவு ம் தைப் பூசம் பெருமை பெறுகின்றது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பர். அந்த அவனாகி ய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந் தமையா லேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்களினூடாக நிகழ்கி ன்ற து என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கு ம் நாள் இந்நாள்.

 

உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினது ம் தோற்றத்திற்கும் வாழ்வுக்கும் செயற்பா டுகளு க்கும் மறைவிற்கும் இயற்கையே காரணியாக அமைகின்றது. இயற்கை யை மீறி எதுவும் செயற்ப்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியா கிய இறைசக்தியை மீறிச் செயற்பட முடி யாது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இயற் கையே விதியாக அமைகின்றது. இதை வலியுறுத்துவதும் இத்தைப்பூச நன்னாளி ன் ஒரு அம்சமாகும்.

 

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத் தின் தேவதையாகக் கொள்ளப்படுகின் றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின் றார். பதஞ்சலி, வியாக் கிரபாதர் ஆகிய முனி வர்கள் இருவருக் கும் சிவபிரானாகிய நடராச ப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளா கவும் தைப்பூசம் விளங்குகிறது

 

அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவா னும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் தைப்பூச நன்னாளாகும்.

 

சிவனுக்குரியசிறப்புமிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத் தைப்பூச நன்னாளானது முருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும். முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது. 

 

சிவனின் அருளினால் தோன்றிய முருகன் அன்னையின் சக்தியையு ம் பெற்று சிவச க்தியின் பேரருள் மிக்கவராக இத் தைப் பூச நாளில் திகழ்வதால் முருகன் ஆலயங் களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்தப்படுகின்றன. முருகனை வேண்டி ப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.

 

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கு ம் உள்ள இத்தகைய தொடர்பின் காரண மாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களி லும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

 

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதி களில் இருந்து ம் விரதம் இருந்து ஆயிரக் கணக்கான  பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள்.

 

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்க ளை அன்றாடம் பாராய ணம் செய்து தைப்பூச த்தன்று பழனி முரு கன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

 

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவ த ற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெ ருமா னின் ஆறுபடை வீடுளிலும் முருகன டியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென் று தைப்பூசத் தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறை வு செய்யும் வழக்கத்தை க் கொண்டுள்ளனர்.

 

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர் த்தி க்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்க மாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தி ல், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித் துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். 

 

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

 

தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வாழ்க்கை யை நம்பிக்கையுடன் சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு எதிர்நோக்கும் நாம் தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதை க்கும் துன்ப, துயரங்க ள் யாவும் துடைத்தெறி யப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரா ர்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்க ள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வே ண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகின்றோம்.

 

இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடு வது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணி ய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட் டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியே ற்றும் இத் தைப்பூச நன்னாள் பல்வேறு நற்செயல்க ள் தொடங்கும் நாளாக அமைகின்றது.

 

“தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமை வதா ல்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப் பெறுகின்றன.

 

இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்  கள் தொய்வின்றி இனிதே நிறை வேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக் கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப் படைத்து, காத்து, அருளி, அழித்து, மறைக் கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொ ண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்ன ம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும்.

 

இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தி யொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும். எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கி விட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச் செய்யும்.

 

உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ள த்தி ல் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதி யான பெருவாழ்வை எதிர் கொள்ள இத் தைப்பூச நன்னாளில் சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்…

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.