பாபாவின் மாறாத அருள்கரம்: சிறுகதை
வியாழன் தோறும் நம் பாபா கோயிலுக்கு தரிசனம் பெற
தவறுவதில்லை, சாய் தயா
என்ற பெயருள்ள நான் !!
நூற்றுக்கணக்கான பக்தர்கள்
வந்தாலும், தங்கள் தங்கள்
டூ வீலர்களை ஒரு வரிசையாக
ஒழுங்குமுறையாக Park பண்ணி
நிறுத்தும் குணம், நம் பாபாவின்
பக்தர்களுக்கே உரிய குணம் !!
அதனால்தான்,
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள
நம் பாபாவின் கோயில் உள்ள
தெருவில்
Parking சண்டை சச்சரவுகள்
ஏற்படுவதே இல்லை!!
வியாழக்கிழமையும்
அந்தத் தெருவாசிகளின்
பிடித்த ஒரு நாளாகப் போய்விட்டது!!
டூ வீலர்கள், வரிசை வரிசையாக
நிறுத்தி வைப்பதில்,
ஒரே பிரச்சினை, நம் வண்டியை
சரியாக அடையாளம் கண்டு
கொள்வதுதானில்லையா ??
இந்த வாரம் என்னாச்சு தெரியுமா ?
தயாவின் ஸ்கூட்டரின் நிறம் போலவே,
அதே கம்பெனியின் ஸ்கூட்டரும்
அடுத்தடுத்து நிறுத்தப்பட்டது
எதேச்சையாக!!
மற்ற ஸ்கூட்டரின் ஓனரும்,
மதிய நேர மஹா ஆரத்தியை
தவறவிட்டுடக் கூடாதேன்னு,
தனது ஸ்கூட்டரிலேயே
வண்டி சாவியை எடுக்காமலேயே
போய் விட்டார், கோயிலுக்கு!!
நமது தயாவுக்கும்,
வண்டியிலிருந்து சாவியை
எடுத்துக் கொள்ளும் பழக்கமே
அமையவில்லை, ஏனோ !!
அந்த மற்ற ஸ்கூட்டரின் ஓனர்
ஆர்த்தியை கண்டு விட்டு
அவசரம் அவசரமாக
ஸ்கூட்டரை ஸ்டார்ட் செஞ்சி
கிளம்பிப் போய்ட்டார்,
தன்