செயற்கை நுண்ணறிவால் பறிபோகும் வேலைகளுக்கு முற்றுப்புள்ளி - சீனா அதிரடி தீர்ப்பு.
சண்டிகேஸ்வரர் முன் கை தட்டலாமா?
எல்லா சிவன் கோயிலிலும் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். அந்த சன்னதியை அடைந்ததும் சிலர் கை களை தட்டி வணங்குவர். சிலர் கன்னத்தில் போட்டுக் கொள்வர். ஏன் அவர் முன் கைகளை தட்டுகிறார்கள். சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டினால் பாவம் வரும். ஏன் கை தட்டக் கூடாது என்பதை பார்ப்பதற்கு முன் யார் இந்த சண்டிகேசுவரர் யார் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
சண்டிகேசுவரர் கதை:
சோழ நாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற கோயில் உள்ளது. இந்த பகுதியில் எச்சதத்தன் - பவித்திரை தம்பதி வசித்து வந்தனர். அவர்களுக்கு விசாரசருமன் என்ற மகன் இருந்தான். இவர் பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டிருந்தான். பசுக்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால், பசுக்களும் விசாரசருமன் மீது உயிரே வைத்திருந்தன.
விசாரசருமன் தினமும் பசுக்களை மேய்க்க செல்லும் போது அங்கு மணலில் சிவலிங்கம் வடித்து தியானம் செய்து வழிபடுவது வழக்கமாக வைத்திருந்தான். இந்த மணல் சிவலிங்கம் மீது மேய சென்ற பசுக்கள் தானாக பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். அதோடு வீடு திரும்பிய பின்னர் சிவ சேவை செய்த பசுக்கள் தங்கள் எஜமானனுக்காக பாலை சுரக்கவும் செய்தன.
ஒருமுறை விசாரசருமன் மணல் லிங்கம் செய்வதும் அதன் மீது பசுக்கள் பால் சுரந்து அபிஷேகம் செய்வதை அந்த ஊர் இளைஞன் பார்த்து ஊரில் சென்று சொன்னான். மாட்டின் உரிமையாளர் எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டித்து வைக்குமாறு கூறினான். இதையடுத்து மறுநாள் விசாரசருமன் பசுக்களை மேய்க்க சென்ற போது, எச்சதத்தன் மறைந்திருந்து அங்கு நடப்பதை பார்த்தான். பசுக்கள் தானாக பால் சுரந்து மணல் லிங்கம் மீது அபிஷேகம் செய்வதைப் பார்த்து கோபம் வந்து விட்டது. மணல் லிங்கம் வடித்த விசாரசருமன் சிவ தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.
கோபத்தோடு வந்த எச்சதத்தன் மனல் லிங்கத்தை காலால் உடைத்தான். இதனால் கோபமடைந்த விசாரசருமன் தான் கையிலிருந்த குச்சியை எச்சதத்தன் மீது எரிந்தான். அது கோடாரியாக மாறி அவரின் காலை காயப்படுத்தியது.
சிவனின் வரம்:
அளவு கடந்த பக்தி வைத்திருந்த விசாரசருமன் முன் தோன்றிய சிவன் பார்வதி, அவரின் காலின் காயத்தை மறையும்படி அருளினான். அதோடு விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்யும் பதவியை (சண்டிகேச) வழங்கினார்.
தனக்கு சூட்டப்படும் அனைத்து மாலை மற்றும் நைவேத்தியங்கள் சண்டிகேஸ்வரருக்கு சேரும் என அருளினார். அன்று முதல் சிவ பெருமானுக்கு செய்யும் நைவேத்தியம், சூட்டும் மாலைகள் சண்டிகேச பதவி செய்யும் விசாரசருமனனுக்கு வழங்கப்படும் பழக்கம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிவனின் 63 நாயன்மார்களின் வரிசையில் சண்டிகேஸ்வரரும் நாயனாராக இணைந்தார்.
கை தட்டி வணங்கக் கூடாது:
சண்டிகேஸ்வரர் எப்போது சிவ தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவர் முன் கைதட்டி அவரின் தியானத்தை கலைப்பது மாபெரும் பாவம்.
சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கைதட்டுவது ஒரு பெரிய பாவ செயல் சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காது எனவும் சிலர் கூறி வருவது அபத்தமானது.
சிவனின் சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்ககிறார் சண்டிகேஸ்வரர். எனவே சிவ தரிசனம் செய்த பிறகு சண்டிகேஸ்வரரை வணங்கும் பொழுது, மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து காண்பித்து, கோயில் சொத்து எதையும் நாம் எடுத்துச் செல்லவில்லை, எனக்கு சிவனின் அருள் மட்டும் வேண்டும் என சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்ல வேண்டும்.