Breaking News :

Saturday, April 27
.

பொங்கல் பொங்கட்டும் கவிதை


பொங்கல் பொங்கட்டும் ! 

வளம் செழிக்கட்டும் !! நலம் பெருகட்டும் !!! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

வெள்ளமில்லாத 

பொங்களில்லை.

 

நல்ல 

உள்ளமில்லை யென்றால் 

வாழ்க்கையில்லை.

 

இனிக்காத 

கரும்பில்லை.

 

இனிமையான 

உறவை விட 

இனிமையானது எதுவுமில்லை.

 

பொங்கலோ  

பொங்கல் என்று பொங்கட்டும்.

உள்ளமெங்கும் மகிழ்ச்சி தங்கட்டும்.

 

தை 

பிறந்தால் வழி பிறக்கும் 

தண்ணீர் இருந்தால் தான் 

விவசாயம் செழிக்கும்.

 

வறுமைகள் ஒழியட்டும்.

பூமியெங்கும் 

மழை பொழியட்டும்.

அனைவரின் 

வாழ்க்கை தரட்டும் உயரட்டும்.

 

காற்று 

வசந்தம் வீசட்டும்.

கல்வி நாட்டில்

 சிறந்து விளங்கட்டும்.

 

புதுமைகள் 

வளரட்டும்.

புன்னகை 

மனதை நிரப்பட்டும்.

 

ஏற்றங்கள் 

உண்டாகிட 

நல்ல

 மாற்றங்கள் உருவாகிட 

 

பழமையே 

முழுவதும் நம்பாமல்.

எல்லாமே 

புதுமையே தன் 

என்று நம்பி வெம்பாமல்.

 

அன்பால் 

அனைவரும் இணைந்து

மொழியால் 

தமிழன் என்ற 

பெருமையே நினைத்து.

ஒருவருக்கொருவர் 

ஆனந்தமாய் அணைத்து 

வாழ்த்துக்கள் சொல்லி மமிழ்ந்திட 

 

உங்களுக்கும் உங்கள்

குடும்பத்தினருக்கும்

எனது இனிய 

தைத் திருநாள் மற்றும் பொங்கல்

நல்வாழ்த்துக்கள்


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.