ஓராண்டுக்கு மேலாக பயன்படுத்தாத யுபிஐ ஐடிகளை டிச.,31க்கு பின் செயலிழக்க செய்யும் வழிகாட்டுதல்களை என்.பி.சி.ஐ (நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு ஜி பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுகின்றன. இந்த சேவைகள் யுனிபைட் பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் (யு.பி.ஐ) கீழ் செயல்படுகிறது.
பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய யு.பி.ஐ மூலமாக டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றி கொள்ளலாம்.
இந்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை செய்யாத யுபிஐ.,கள் டிச.,31க்கு பிறகு செயலிழந்து விடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.