திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர். ரியா அவர்கள் தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
*இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம்
*அடையாள அட்டைகள்
*பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம்
*உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு
- எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது தி.மு.க.
தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது! நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்!