Breaking News :

Saturday, April 20
.

பெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு  


கேளம்பாக்கம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் காவல்துறை அனுமதியின்றி பாஜக ஆர்ப்பாட்டம் நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க நடிகை குஷ்புவை தடுத்து நிறுத்திய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து பின்னர் மாலை வேளையில் விடுதலையான பின்பு நடிகை குஷ்பு கூறியதாவது:-

மனுதர்மத்தில் பெண்களை பற்றி உயர்வாக பேசியது திருமாவளவனுக்கு தெரியவில்லை. பெண்களை  பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டம் கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராடினேன். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் எதிரான கருத்து. ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொள்கைகளை வீட்டில் இருந்துதான் துவக்க வேண்டும். பெண்கள் மதிக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார், மதிக்காத இடத்தில் கடவுள் இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே பலருக்கு கடவுள் தேவையாக இருக்கிறார் என்றார். 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.