"வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசித்தேன். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கான உணவு - தங்குமிட வசதிகள் போன்றவை குறித்துக் கேட்டறிந்தேன்.
கனமழை நிற்கும் வரையில், அதிகாரிகள் விழிப்புடன் செயலாற்றி, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுமாறு உத்தரவிட்டுள்ளேன்" என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
#NorthEastMonsoon #ChennaiRains #TNRains