Breaking News :

Saturday, April 27
.

மீண்டும் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் சுப்பிரமணியன்


சென்னை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி நடைபெற்றது. இந்த விழாவில்பங்கேற்ற பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  “கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி , உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு நூற்றுக்கணக்கில் உயர்கிறது. உலகளவில் தொற்று அச்சம் மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாதுகாப்பான சூழல் அவசியம். நேற்று ஐஐடியில் 3 பேருக்கு தொற்று என்றவுடன் உடனே அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஐஐடியில் 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வட மாநிலங்களில் இருந்து சென்னை வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வட மாநில தொழிலாளர்கள் குழு குழுவாக வருகின்றனர். தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம்  தொழிலாளர்களுக்கு  இலவச ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு இலவச தடுப்பூசியும் செலுத்தப்படும். இவ்வாறு மேலும் அவர் தெரிவித்தார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.