டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி.
மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அமலாக்கத்துறை உள்ளிட்ட குற்ற வழக்குகளிலிருந்து கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க கோரி மனு.
பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை குறைபாட்டை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்குமாறு மனுவில் கோரிக்கை
பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.