புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்து, ரத்தம் ஆகியவற்றை பிற சுகாதார மையங்களுக்கு விரைவாக அனுப்பி வைக்க ஏதுவாக ட்ரோன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, முதல் ட்ரோன் சேவை மூலம்கோர்தா மாவட்டத்தில் உள்ள டாங்கி சமுதாய சுகாதார மையத்துக்கு ரத்தம் அனுப்பி வைக்கப்பட்டது.
12 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோன், 2 முதல் 5 கிலோ வரையிலான மருந்துகளை எடுத்துச் சென்று விநியோகிக்கும் திறன் வாய்ந்தது. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் செல்லும் இதில் ஜிபிஎஸ் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மருந்து பொருட்களை குறித்த நேரத்தில் விநியோகம் செய்ய முடியும். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, ஸ்கை ஏர் மொபிலிட்டி நிறுவனம் ட்ரோன் சேவையை வழங்குகிறது.