மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீட்டை சமாளிக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையினை வழங்கி வருகின்றது. கரோனா காலத்திற்கு பிறகு போதுமான நிதி இல்லாமையால் இழப்பீடு வழங்க முடியாது என்பதை மத்திய அரசு அறிவித்தது.
இழப்பீட்டை சமாளிக்க 21 மாநிலங்கள் கடன் வாங்க விருப்பத்தை தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் 9,627 கோடி ரூபாய் வெளிச்சந்தையில் கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.