இந்தியாவின் ஒரே 'ஆண்' நதி எது ?

india-men-river
இந்தியாவின் ஒரே 'ஆண்' நதி எது ?

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் பெண்களின் பெயர் கொண்டு இருக்க ஒரு நதி மட்டுமே ஆன் நதி என அழைக்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலமான அசாமின் மையத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதி தான் இந்தியாவின் ஒரே "ஆண்" நதி என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மபுத்திரா திபெத்தில் தொடங்கி, இமயமலை வழியாக 2,900 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து, பின்னர் அசாம் வழியாக இந்தியாவில் நுழைந்து வங்கதேசம் சென்று வங்காள விரிகுடாவை அடைகிறது.

பிரம்மபுத்திரா என்பதற்கு சமஸ்கிருதத்தில் 'பிரம்மனின் மகன்' என்று பொருள்.

மற்ற நதிகளைப் போல் அல்லாமல், இதன் வலிமையான மற்றும் ஆக்ரோஷமான நீரோட்டத்தின் காரணமாக இந்த நதிக்கு ஆண் பெயர் சூட்டப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

 பிரம்மபுத்திரா நதி அதன் கரையோரம் வாழும் சமூகங்களின் உயிர்நாடியாக கருதப்படுகிறது.

எண்ணற்ற தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விடத்தை வழங்குகிறது.

இதில் வங்காளப் புலி மற்றும் அழிந்து வரும் கங்கை டால்பின் ஆகியவை அடங்கும்.

அசாமின் வளமான சமவெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நெற்பயிர்களுக்கு இந்த நதியின் நீர் முக்கிய வாழ்வாதாரமாகும்.

குவஹாத்தியின் பிரமாதமான சூரிய அஸ்தமனக் காட்சிகள் மற்றும் படகுப் பயணங்களுக்காகப் புகழ் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.