GD நாயுடு அவர்கள் பற்றி ஒரு சிறிய வரலாறு!

gd-naidu-history
GD நாயுடு அவர்கள் பற்றி ஒரு சிறிய வரலாறு!

கோவை மாவட்டத்தில் ஆசியாவிலேயே, மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் கோபால துரைசாமி நாயுடு (ஜி.டி.நாயுடு) அவர்கள் பெயரை இந்த மேம்பாலத்திற்கு சூட்டியமைக்கு நன்றி.

அய்யா அவர்கள் கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில்.  1893மார்ச் 3ந்தேதி பிறந்தார்... பிறந்தவுடன் தாயை இழந்த இவர் இவரது
மாமா வீட்டில் வளர்ந்தார்... ஆரம்ப கல்வி திண்ணை பள்ளியில்.. ஆரம்ப பள்ளியே முடிக்காத இவர் உள்ளூரில் ஒரு தோட்டத்து பணியாளராக சேர்ந்தார்.

தன்னுடைய சிறிய வயதில் வேலை தேடி கோவை வருகிறார் ஒரு உணவகத்தில் பணியாளராக மாதம் வெறும் மூன்று ரூபாய் சம்பளம்
மூன்று நேரம் சாப்பாடு என்ற ஒப்பந்தத்தில் வேலைக்கு சேர்ந்து சில ஆண்டுகள் வேலை செய்து சேமிப்பு பணத்தில் ஒரு பெட்ரோலில் இயங்கும் ஒரு இருசக்கர வாகனம் வாங்குகிறார்.

அதன் பின் அவர் உலகமே வியக்கின்ற  வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அறிமுகம் படுத்துகிறார்.

1920ம் வருடம் மக்கள் பயணத்திற்கு மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்த காலம்... அய்யா அவர்கள் வெளிநாட்டில் இருந்து சில உபகரணங்களை வாங்கி ஒரு புதிய பேருந்து தயார் செய்து அதை பழனி. To பொள்ளாச்சி தடத்தில் இவரே ஓட்டுனராக பணியாற்றி இயக்குகிறார்...

இதுதான் தென்னிந்தியாவின் முதல் பஸ்..
பிறகு யுனைடட் மோட்டார் என்னும் பஸ் கம்பெனி ஆரம்பித்து ஒரு பேருந்திலிருந்து 280 பேருந்துகளாக உயர்த்தி இந்தியாவின் மிகப் பெரிய பஸ் கம்பெனி யாக உயர்த்தினர்.. தமிழகத்தின் எல்லா வழித்தடத்திலும் இயக்கினார்... தமிழகம் முழுவதும் தினமும் 10000 பேர் பயணித்தனர்... திருப்பூரில் ஒரு பஞ்சாலையை நிறுவி. அதன் வளர்ச்சி மூலம் மிகப்பெரிய பணக்காரராக மாறினார்...

இவர் தனக்கு கிடைக்காத கல்வி ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்.. பகுத்தறிவு கொள்கையுடையவர்.. பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடையவேண்டும் என்கிற எண்ணத்தில் ஐம்பது ஏக்கர் நிலம் வாங்கி அதில் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி கட்டி அதை அரசுக்கு இலவசமாக கொடுத்தார்..

அதுதான் இன்றைக்கு ஆர்.டிஓ அலுவலகம் ரோட்டில் 
உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி
(WOMENS POLYTECHNIC COLLEGE) 
அதேபோல் இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில்  தடாகம் சாலையில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி கட்ட வெள்ளைக்கார கவர்னரிடம் அனுமதி கேட்டார்.. போர் நேரத்தில் அனுமதிக்க மறுத்தார் கவர்னர் சர்.ராபர்ட் அவர்கள்..

மிக பிடிவாதமாக அனுமதி வாங்கி மிக குறுகிய காலத்தில் 100 ஏக்கரில் ஒரு பொறியியல் கட்டி முடித்து கவர்னரை திறப்பு விழாவிற்கு அழைத்தார்..

கவர்னர் கல்லூரிக்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்து அரசாணை வெளியிட்டார்..
நாயுடு அவர்கள் என் பெயரை கல்லூரிக்கு வைத்தால் ஒரே நாளில் இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுவேன் எனக்கூறி அரசு அறிவிப்பை வாபஸ் பெற வைத்தார்

அதையும் அரசுக்கு இலவசமாக கொடுத்தார்... இன்றைய அரசினர் பொறியியல் கல்லூரி (GOVERNMENT COLLEGE OF TECHNOLOGY)
இன்று பலநூறு கோடி ரூபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செம்மொழிப் பூங்கா இடம், மத்திய சிறைச்சாலை இடம் உள்ளிட்ட நகரின் மத்தியில் உள்ள ஒரு ஐந்நூறு ஏக்கர் நிலங்கள் நாயுடு அவர்கள் அரசுக்கு இலவசமாக கொடுத்தது.... இவரது கண்டுபிடிப்புகள் ஜெர்மனி தொழில் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இன்றைய மதிப்பிற்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் கல்லூரிகள் போன்றவற்றை 
அரசுக்கு தானமாக கொடுத்த அந்த அதிசய மனிதர் ஆசியாவின் பெரிய மேம்பாலம் என பெருமைப்படுத்தும் இந்த அவினாசி சாலை மேம்பாலத்திற்கு, அய்யா ஜி.டி.நாயுடு அவர்கள் பெயரை வைத்தது சாலச் சிறந்த நிகழ்வு...