சிறைத்துறை அதிகாரிகள் அழுத்தத்தில் இருக்காங்க! - அமைச்சர் நிர்மல்குமார்.
விண்வெளித் துறையில் சாதனை படைத்த இந்தியப் பெண்மணி
அமெரிக்காவின் தேசிய ஆகாய, விண்வெளி அருங்காட்சியகத்தில் புதிதாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ஒரு நீலநிறப் பட்டுப்புடவை.
புடவைக்குச் சொந்தக்காரர் நந்தினி ஹரிநாத் என்பவராகும். செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ஆய்வுகள் மேற்கொள்ளத் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் திட்டத்தின் துணை செயல்பாட்டு இயக்குநர் அவர்.
2013 டிசம்பர் முதல் தேதி செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய மங்கள்யானின் பயணம் வெற்றிகரமாய்த் தொடங்கியது.
நந்தினி உட்பட புடவை அணிந்த பல பெண் ஊழியர்கள் மங்கள்யானின் வெற்றியைக் கொண்டாடுவது போன்ற படங்கள் சமூக வலைத்தளத்தில் மிக வேகமாய்ப் பகிரப்பட்டன.
அந்தப் புகைப்படத்தில் நந்தினி அணிந்திருந்த புடவை தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புடவை என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும்.
மிகச் சுலபமாக மக்களால் அதை அடையாளம் காணமுடியும்.
அத்துடன் ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் விண்வெளித் துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதைப் புடவை வலியுறுத்துவதாக தேசிய ஆகாய, விண்வெளி அருங்காட்சியகம் கருதுகிறது