எவ்வளவு புஷ்டியான சொற்கள்! எழுதினது பெரியவாதானே!' என்று அந்த இளம் தம்பதி நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?
விவாகரத்து ரத்தாகிவிட்ட அற்புத நிகழ்ச்சி
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
தஞ்சாவூர் மாவட்டம். பதினெட்டு கிராம வாத்திமர் குடும்பம். செல்வச் செழிப்பு. ஈசுவர ஆராதனை. பெரியவாளிடம் பக்தி.
ஜாதகம் பார்த்து, பெண் பார்த்து, விமர்சையாக விவாஹம் நடந்தேறியது மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கை.
எந்த கிரகம் இடம் பெயர்ந்ததோ?
சாதாரணமாகத் தோன்றிய கசப்பு. - விவாகரத்து வரை வந்துவிட்டது.
விசாரணைகள். ஆலோசனைகள், மறு ஆய்வுகள்.
ஊஹூம்.
நாளைக்குத் தீர்ப்பு.
பெண்ணும்,பெற்றோரும் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள்.
"காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ"....-பெரியவா.
சிறிது நேரத்துக்குப் பின்னர்,பையனும் பெற்றோரும் வந்தார்கள்.பெரியவருக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது.
"நாளைக்கு ஜட்ஜ்மெண்ட்..."
"காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ.."--பெரியவா.
கோயிலில் ஏராளமான கூட்டம். அத்துடன், பக்தி பூர்வமாகத் தரிசனம் செய்யும் நிலையில் யாருமில்லை. பெரியவா சொல்லிட்டா, அதனால் வந்தேன்.
ஸ்தானீகர் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத் தட்டைக் கொண்டு வந்தார்.
""சேர்ந்து வாங்கிக்கோங்கோ!--- ஸ்தானீகர்.
சேர்ந்து!
"நான் ...தனியாத்தான் வந்தேன்.."
சட்டென்று தலை நிமிர்ந்தபோது, அவர்...அவள்...
"சேர்ந்து வாங்கிக்கோங்கோ.."--மறுபடியும்!
காமாக்ஷியின் ஆணையா?
கோயிலிருந்து வெளியே வந்தபோது, இரண்டு குடும்பத்துப் பெரியவர்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்.....பேசிக் கொண்டார்கள்.
விவாகரத்து ரத்தாகி விட்டது.
காமாக்ஷியல்லவா ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கிறாள்!
பெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தார்கள்.இளம் தம்பதி.
"ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்துப் போலிருக்கே"---பெரியவா.
எவ்வளவு புஷ்டியான சொற்கள்!
'எழுதினது பெரியவாதானே!' என்று அந்த இளம் தம்பதி நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?