Breaking News :

Thursday, May 16
.

மனிதனின் இறுதிச்சடங்கில் ஏன் பங்கேற்க வேண்டும்?


மரணம் உன்னதமானது.

அதை உணரும் போது...

 உயிர் உடலில் இருக்காது. 

 

 ஒரு மனிதன், எப்போது அச்சம் கொள்கிறான்?

 

*இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்.*

 

    உலகின் வேறு எதுவும் , மனிதனை இத்தனை அசைத்துப் பார்ப்பதில்லை.

 

   நமக்கு சோறு ஊட்டிய அன்னை, நம்மை தோளில் சுமந்த தந்தை,

நாம் தூக்கி வளர்த்த பிள்ளை, நமது இன்ப துன்பங்களை பகிர்ந்த வாழ்க்கைத் துணை, நம்முடன் சுற்றித் திரிந்த நண்பர்கள்,

இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்.

 

   ஒருநாள் நமக்கும் மரணம் இருக்கிறது என்ற எண்ணமே.... நம்மை ஆட்டிப் பார்க்கிறது.

 

    மனதுக்கு நெருங்கியவரை-

குழிக்குள் இறக்கி 

மண்ணிட்டு மூடும் போது ..வரும் வெறுமை...

 

    நமது தலையில் சேர்த்து வைத்திருக்கும்  புகழ்,

ஈகோ, அகந்தை, கர்வத்தையும் 

சேர்த்து ,அனைத்தையும் மண்ணோடு மூடிவிடும்.

 

    ஒரு மரணத்தை காணும் போது ... மனம் இறங்க வேண்டும்.

 

    "மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம் தான்.. ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

 

    பணம் மீது தீராத வெறி,

பதவி மீது தீராத வேட்கை,

இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.

 

    ஒவ்வொரு மரணத்தைக் காணும் போதும்..

நம் மனதில் இருக்கும் 

வஞ்சம், பகை, ஈகோ, போன்றவற்றை மறக்க வேண்டும். 

 

    ஒரு பிரேதம் மண்ணில் அடக்கப்படும் போது ....

வஞ்சம், பகை,

ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும். 

 

    மரணத்தின் எண்ணம்,  நம் இறையச்சத்தை அதிகரிக்கும்.

 

      மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். காரணம், மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது... நம் மனமும்  அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது. 

 

     மண்ணின்  இயற்கை சுழற்சியை ஒழுங்கு செய்யும் ஒரே விஷயம்

மரணம் மட்டுமே!

 

     மரணத்தை நேசிப்போம்!

காரணம் , நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்ட பரிசாக மரணம்தான் காத்திருக்கிறது. 

 

     மண்கலம் கவிழ்ந்த போது... வைத்து வைத்து அடுக்குவார்!

வெண்கலம் கவிழ்ந்த போது... வேணும் என்று பேணுவார்!

நன்கலம் கவிழ்ந்த போது... நாறும் என்று போடுவார்!

 

     மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் ....அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள் !

 

  வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் ....அது வேணும் என்று பாதுகாப்பார்கள்!

 

ஆனால் .....

 

    நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது .... அதனைப் பிணம் என்று இகழ்ந்து... அது கிடந்தால் நாறும் எனக் கூறி, குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள் !

 

     இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத  எண் சாண் உடம்பில் ,உயிர் இருக்கும் போதே....நம்மால் இயன்ற நல்லதை மற்றவர்க்கு செய்வோம்... நாமும் வாழ்ந்து.. பிறரையும் வாழவைத்து... மனநிறைவு கொள்வோம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.