Breaking News :

Thursday, April 25
.

முகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி?


முகத்தில் பருக்கள் வந்தால், உடனே அவற்றை உடைக்கக் கூடாது. ஏனெனில் அவற்றை உடைத்தால், அவற்றிலிருந்து வரும் சீல், முகத்தில் பரவி நிறைய பருக்களை வர வைப்பதோடு, அவை பரு வந்த இடத்தில் தழும்புகளை ஏற்படுத்திவிடும்.

 முகத்தில் தழும்புகள் ஏற்படாமல் இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் மாசுக்கள் மற்றும அழுக்குகள் தான்

முகத்தில் பருக்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்தால், உடனே முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

 பருக்கள் முகத்தில் இருந்தால், வெயிலில் அதிகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள், சரும செல்களை பாதிப்பதோடு, பருக்களை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி தழும்பை ஏற்படுத்திவிடும்.

 தழும்புள்ள முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தேய்த்து, முகத்தை மெல்லிய ஆவியில் சிறிது நேரம் காட்டவும். இதனால் முகத்தில் உள்ள சிறுசிறு துளைகள் மறைந்து, தழும்புகளும் மறையத் தொடங்கும்.

 சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் அல்லது பாலுடன் கலந்து, அக்கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

 பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊற வைத்து, பின் அதன் தோலை உரித்து விட்டு, அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், அரைத்ததை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்து, அந்தப் பேஸ்ட்டைத் தழும்புகளின் மீது தடவி வர வேண்டும்.

 எலுமிச்சைச் சாற்றில் பஞ்சை நன்றாக ஊற வைத்து, பின் அதை மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். எலுமிச்சைச் சாற்றை தோல் உறிஞ்சும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும். இதனால், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறையச் செய்து புதிய தோல் வருவதற்கு உதவும்.

 பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதை தழும்புகளின் மீது தடவி ஓரிரு நிமிடங்கள் வரை அடிக்கடி தேய்க்க வேண்டும். பின் முகத்தை மிதமான சுடுநீர் கொண்டு கழுவ வேண்டும்.

 முள்ளங்கி விதைகளை நன்றாக அரைத்து, தழும்புள்ள முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

 உருளைக்கிழங்கை அரைத்து, அதை தழும்புகளில் தேய்க்க வேண்டும். உருளையில் உள்ள சல்பர் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தழும்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டவை.

 தழும்புகளை நீக்குவதற்கென்றே, சில க்ரீம்கள் மற்றும் ஜெல்கள் கடைகளில் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தி வந்தாலும், முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் வடுக்கள் மறைந்து, உங்கள் முகம் பளிச்சிடும்.

 எலுமிச்சைச் சாற்றை தினமும் 3 முறை குடித்து வந்தாலும், முகத் தழும்புகள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.