Breaking News :

Monday, February 10
.

இதய அடைப்பு நீக்குமா இஞ்சி எலுமிச்சை தேன் பானம்?


இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்து பானம் தயாரிப்பது எப்படி அதில் என்னவெல்லாம் நன்மைகள் அடங்கியுள்ளன என பார்ப்போம்.

எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

அடுத்து ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சையை கழுவி சிறு சிறு துண்டுகளாக தோலுடன் நறுக்கிக் கொள்ளவும். இந்த பானமானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு நல்ல அருமருந்தாக செயல்படும். அவர்களின் ரத்த ஓட்டம் சீராகி சுவாச பிரச்சனை சரியாகும்.

சிலருக்கு அடிக்கடி காய்ச்சல் சளி இருமல் உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பானம் உதவும். வயிற்றில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை குறைக்க உதவும்.

இந்த பானம் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நச்சுக்களை வெளியேற்றுகிறது. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புற்றுநோய் எதுவும் வராமல் தடுக்கிறது. மேலும் பல்வேறு வயிற்றுப் பிரச்சினைகளையும் தீர்க்கும். இந்தப் பானத்தின் முக்கிய பயன்பாடு இதய அடைப்பை நீக்குவது தான். இதனால் ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்படாது.

அடுத்து இஞ்சியை சிறு துண்டுகளாகவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் துண்டுகளாக்கிய இஞ்சி மற்றும் எலுமிச்சை போடவும். ஓரளவு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். அதிக நேரம் கொதிக்க கூடாது.

இது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகலாம். இதை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும். மேலும் சுவாசப் பிரச்சினைகள், இதய அடைப்பு செரிமான பிரச்சனைகள் போன்றவை நீங்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.