Breaking News :

Thursday, April 25
.

மூட்டுவலியை குணமாக்கும் சுக்கு!


அறுவடை செய்த இஞ்சியை ஓர் நாள் முழுவதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்தால் சுக்கு ரெடி.

பித்தம், வாயுத்தொல்லை, அஜீரணத்தைப் போக்கும்.  மலக்குடல் கிருமிகளை குறைக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை குறைக்கும். 

** சுக்குடன் சிறிது பால் சேர்த்து நன்கு சூடாக்கி ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி குணமாகும்.

** சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 

** சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை ஆகிய ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகினால்  கடுமையான சளியை ஓரிரு நாட்களில் குணமாகும்.
**  சுக்குடன் ஓர் வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
** சுக்கில் வேப்பம்பட்டை போட்டு கசாயம் வைத்து குடித்துவர வாதம் குணமாகும்.
** சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து  நெற்றியில் தடவினால் தலைவலி போய்விடும்.
** சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து  காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கும்.
** சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால்  அலர்ஜி அகலும்.
** சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் குடித்துவந்தால் மாந்தம் குணமாகும்.
** சுக்குடன்  துளசி இலையை மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டலை நிறுத்தும்.
** தயிர்சாதத்துடன் சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
** சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கசாயம் செய்து, தினம் மூன்று வேளை இரண்டு நாட்களுக்கு குடித்தால் விஷக் காய்ச்சல் குறையும்.
** சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் வராது.
** சுக்குத் தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.
** சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து நைசாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறுவதுடன் குரல் இயல்பு நிலைபெறும்.
** சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள  கிருமிகள் அழியும்.
** சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து கசாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
** சுக்கு, 5 மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறிக்க முடியும்.
** சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் குற்றிருமல் குறையும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.