தேவையான பொருட்கள்:-
புடலங்காய் – 200 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 25 கிராம்
மிளகாய் வற்றல் – 4 எண்ணிக்கை
மிளகு – 10 எண்ணிக்கை
பெருங்காயம், உப்பு – தேவையான அளவு
*செய்முறை:-
முதலில் புடலங்காயை சிறிதாக அரிந்து, எண்ணெயிலிட்டு வதக்கவும்.
பின்னர் மற்ற சாமான்களையும் எண்ணெயில் வறுத்து, சேர்த்து அரைக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு தாளித்து, கெட்டியானதும் இறக்கவும்.
*பயன்கள்:-
உஷ்ண வியாதிகள், குடற்புண் உள்ளவர்களுக்கு உகந்தது.
இதனை ரொட்டி, சப்பாத்தி, ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.