Breaking News :

Monday, January 13
.

முட்டை பிரியாணி செய்வது எப்படி?


தேவையானவை:
பாசுமதி அரிசி – அரை கிலோ,
முட்டை – 10, தக்காளி – 4,
பெரிய வெங்காயம் – 3,
கடைந்த தயிர் – 1 கப்,
எண்ணெய் – அரை கப்,
நெய் – கால் கப்,
உப்பு – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
இஞ்சி + பூண்டு விழுது – 4 டீஸ்பூன்.
அரைக்க:
பட்டை – 2,
லவங்கம் – 2,
ஏலக்காய் – 6,
பச்சை மிளகாய் – 5,
புதினா – ஒரு கைப்பிடி,
மல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை:
அரிசியைக் கழுவி ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள்.

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். பிறகு, அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்கி, அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கி எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.

இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் கலவையில் போட்டு கிளறி முன்பு சொன்ன முறையில் ‘தம்’ போடுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.