Breaking News :

Thursday, April 25
.

என்ன தானம் செய்தால் என்ன பலன்


இந்து மதப்படி, தான தர்மத்தின் வகைகள் மற்றும் அவற்றைச் செய்வதால் கிடைக்கும் பலன்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

1) தீப தானம்:

இஷ்ட தெய்வ ஆலயங்களில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். ஏழை மற்றும் பிராமணர்களுக்கும், கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

2) நெய் தானம் :

பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை), நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அனைத்து விதமான நோய்களும் தீரும்.

3) ஆடைகள் தானம் :

பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

4) தேன் தானம் :

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

5) அரிசி தானம் :

பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

6) கம்பளி-பருத்தி தானம் :

வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.