Breaking News :

Wednesday, April 24
.

திருச்சி உச்சிப்பிள்ளையார் தரிசனம்


ஸ்ரீ விநாயகர் காரிய சித்தி மாலை இன்று 10/ 9/2021 வெள்ளிக்கிழமை ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் இந்நாளில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும், செய்யும் தொழிலில் இடர்கள் விலகவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் விநாயகர் அஷ்டகம் என்னும் காரிய சித்தி மாலை பெரிதும் உதவும்.

தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலிலுள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று சர்க்கரை சேர்க்காத பால் கோவா வாங்கி வந்து சந்தன காப்பு செய்வது போல் பால் கோவா காப்பு செய்து மேற்கண்ட அஷ்டகத்தை 1 முறை பாராயணம் செய்யவும். காப்பு செய்த பால் கோவாவில் பாதியை அங்கிருப்பவர்களுக்கு வழங்கவும்.

பின்பு வீட்டிற்கு வந்து சக்தி கணபதி படம் அல்லது விநாயகர் சிலை முன்பு 8 முறை பாராயணம் செய்து மீதி பால்கோவாவை வீட்டிலுள்ள அனைவருக்கும் வழங்கவும். இதை மூன்று சங்கடஹர சதுர்த்திகள் செய்யவும். கோவிலின் விநாயகர் சிலைக்கு ஏற்ப பால்கோவாவின் அளவை வாங்கிக் கொள்ளவும்.

90 நாட்களுக்கு வீட்டிலோ அல்லது வெளியிலோ அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும். கண்டிப்பாக பலன் கிடைக்கும். காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.

தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.
தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.
தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.

இதன் ஆழ்ந்த உண்மைப் பொருள் விளக்கம் பெருங்குருமார்களிடம் சீடர்களாகி தெரிந்து கொள்ளலாம். மச்ச முனிவரின் சித்த ஞான சபையிலும் சீடராகி தெரிந்து கொள்ளலாம்.

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம்.

உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம். 

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். 

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன் 
 
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். 
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.
ஆக்கம்: காசிப முனிவர் ... தமிழில்: கச்சியப்பர்

மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும்.  கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.

தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர்.  சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான்.  மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.

தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.

தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.