Breaking News :

Saturday, June 10

அம்மனுக்கு உகர்ந்த ஆடி மாத கூழ் செய்யலாம் வாங்க?

தமிழ் மாதங்களிலேயே அம்மனுக்கு மிகவும் சிறப்பு பெற்ற மாதம் என்றால் அது, ஆடி மாதம் தான். இப்படி சிறப்பு பெற்ற இந்த மாதத்தில் அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூழ் செய்து அம்மனுக்கு படைத்து, அதனை அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கி மகிழ்வர்.

இத்தகைய அம்மனுக்கு மிகவும் பிடித்த கூழ் செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ராகி மாவு - 1 கப்

தண்ணீர் - 5 கப்

சினன் வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)

தயிர் - 1 கப்

மோர் மிளகாய் - 3

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

ஒரு பெரிய பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டி சேராமல் கரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கரண்டியால் நன்கு கிளறவும்.

கெட்டியான பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இறந்து இறக்கி விடவும். சிறிது ஆறவிட்டு அதில் சிறிய வெங்காயத்தையும், தயிரையும் சேர்ந்து நன்கு கரைக்க வேண்டும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மோர் மிளகாயைப் போட்டு பொன்னிறமாக பொறித்து, கரைத்து வைத்துள்ள கூழில் சேர்த்து நன்கு கிளறிவிடவும். 5 நிமிடம் கழித்து, பரிமாறலாம். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கூழ் ரெடி.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.