Breaking News :

Saturday, April 20
.

வின்னர் 2 - நடிகர் பிரசாந்த் 


நடிகர் பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். 

சுந்தர் சி இயக்கத்தில் வின்னர் வெளிவந்தது. இதில், பிரசாந்த், வடிவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்ததை அடுத்து வின்னர் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் கூறுகையில், "அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம் முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். இந்த தகவலினால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.