Breaking News :

Saturday, April 20
.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி


கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது.  அக்டோபர் 16-ம் தேதியில் இருந்து 24-ந்தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகன ஊர்வலத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட், ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பக்தர்கள் என தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் பக்தர்கள் வரை நான்கு மாடவீதிகளில் அமர திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூர் பக்தர்கள் மட்டும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் வாகன  சேவையை பார்க்க 4 மாடவீதிகளில் அனுமதிக்கப்படுவர். 

கொரோனா பாதிப்பு வராமல் தடுப்பதற்காகவும், பக்தர்கள் இடையூறு இல்லாமல் அமர்ந்து 4 மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 6 அடி தூரத்துக்கு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் போடப்பட்டு உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகியவை நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.