மாநில தேர்தல் ஆணையம் அதிரடி, பிப்ரவரி 11 வரை தமிழகம் முழுவதும் இவற்றிற்கு தடை. இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது.
சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் ,பிரச்சாரப் பொருட்களுக்கு தடை.
மத சார்புடைய சின்னங்கள், சமூகம் மற்றும் சாதி அடிப்படையான உணர்வுகளை தூண்டி வாக்குசேகரிக்க கூடாது.
மத, மொழி அடிப்படையில் வெறுப்புணர்வை அதிகப்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது.
சகவேட்பாளர்களின் நடத்தை குறித்து விமர்சனம் செய்யக்கூடாது.
பிறவேட்பாளர்களின் கூட்டங்கள், பிரச்சாரங்களில் இடையூறு செய்ய தடை. 20 ஆதரவாளர்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்ய அனுமதி
நோட்டீஸ்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம்.
அரங்கங்களில் நடைபெறும் கூட்டங்களில் 50 % பேருக்கு மட்டும் அனுமதி திறந்தவெளி அரங்கங்களில் 30% பேருக்கு அனுமதி.