Breaking News :

Tuesday, April 23
.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்ரீசாந்த்


இந்திய கிரிக்கெட் அணியில் உலகக் கோப்பையில் பங்கேற்று, சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். கேரளாவில் பிறந்த இவர், 2006ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். டோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார்.

இதுவரை 27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். 

இந்நிலையில், ஸ்ரீசாந்த், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். டுவிட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்த ஸ்ரீசாந்த், இந்தியாவுக்காக விளையாடி எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதை எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன், என கூறி உள்ளார்.. 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.