Breaking News :

Wednesday, April 24
.

1 முதல் 9 வது வரவு பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு


தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை என தமிழக  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

மேலும், 11 ஆம் வகுப்புக்கு இம்மாத இறுதியில் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 12 ஆம் வகுப்புக்கான தேர்வு நேற்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகள் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் தேர்வுகளை எழுதுகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து 10 ஆம் வகுப்புக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 12வது பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.