Breaking News :

Saturday, April 01

நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்களுக்கு நாளை முதல் வினியோகம் -தமிழ்நாடு அரசு

நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்களுக்கு நாளை முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியபடி, 16-ந்தேதி (இன்று) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வரவேண்டிய, நிலுவையுள்ள கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பை கடைகளில் இறக்கும் பணி நடைபெறும்.


17-ந்தேதி (நாளை) காலை 7 மணி முதல் சென்னை தெற்கு மண்டல கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகள் திறந்து செயல்படும். இதுவரை பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.