Breaking News :

Wednesday, March 29

38 நாட்களுக்கு பிறகு செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் திறப்பு

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் இன்று திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதையடுத்து, பாலம் சீரமைப்பு பணிக்காக, பாலத்தை மூடுவதாக கடந்த 7-ந்தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, திருச்சியிலிருந்து இருந்து சென்னை வரும் வாகனங்கள், மாற்றுவழியாக சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி வர உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் பாலாறு பாலத்தில் புதுப்பித்தல் பணி முடிவடைந்ததால் மீண்டும்  இன்று காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.