Breaking News :

Thursday, April 25
.

பொது வேலைநிறுத்தம்- சென்னையில் நாளை 11 இடங்களில் மறியல்


மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆகவே, நாளையும், நாளை மறுநாளும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

இதனால் வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பணிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு மாநில தொழிற்சங்கங்களும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப். மற்றும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.