Breaking News :

Wednesday, April 24
.

கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு


தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள்  குறுவை பாசனத்திற்கு ஈடுபடுவதற்காக, மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி தமிழக முதலமைச்சர்  தனது கரங்களால் திறந்துவைத்தார்.

இந்நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தஞ்சை நீர்வளத்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.