Breaking News :

Friday, April 19
.

வரும் 14, 15-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்: தெற்கு ரெயில்வே


வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகள் 14, 15 ஆகிய தேதிகளில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என 
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை ஆகிய பிரிவுகளில் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.