Breaking News :

Friday, April 19
.

புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கு இ-பதிவு!


தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ- பதிவிற்காக  https://eregister.tnega.org/#/user/pass என்ற இணைய தளத்தைப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

இந்த இணைய தளத்தில் புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ- பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டது.

இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், "திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒரே பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இ- பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ- பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பத்தாரரின் பெயர் (மணமகன், மணமகள், தாய், தந்தை) திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும். இ- பதிவின் போது திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவல், ஒரு நிகழ்வுக்கு அதிகமுறை இ- பதிவு செய்தால் சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், செல்போன் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் அவசியம் ஆகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.