Breaking News :

Friday, April 19
.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி -முதலமைச்சர் ஆய்வு


காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. 

இந்தத் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில்  ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடந்து வரும் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகள் முடிந்துள்ள விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வை முடித்துக் கொண்டு அவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டுச் சென்றார். நாளை காலை 2-ம் நாளாக ஆய்வுப் பணியை தொடர்கிறார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.