Breaking News :

Wednesday, April 24
.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 


கொரோனாவை ஒழிப்பதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது தமிழக அரசு. இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்று பல்வேறு மாவட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரில் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். மற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றுவருகிறது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.