வெளியூர் செல்லும் ரயில்களின் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் அறிமுகம்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பு,கம்பளி போர்வை சேவைகள் தற்போது படிப்படியாக மீண்டும் வழங்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
1. நெல்லை எக்ஸ்பிரஸ் 19.05.22 முதல்,
2. பொதிகை எக்ஸ்பிரஸ்
21.05.2022 முதல்,
3. நெல்லை - ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ரா 23.05.22 முதல்,
4. மதுரை - புனலூர் 23.05.22 முதல்,
5. மதுரை - டெல்லி சம்பர்க் கிராந்தி 24.05.22 முதல்,
6. மதுரை சென்னை மஹால் எக்ஸ்பிரஸில் 26.05.22 முதல்,
மீண்டும் படுக்கை விரிப்புகள், கம்பளிப் போர்வைகள், தலையணைகள் வழங்கப்படும்.