Breaking News :

Friday, April 26
.

10-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு : மேலும் கசிந்தது ஒரு வினாத்தாள் 


தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் இப்போது நடந்து வருகிறது.
 
திருவண்ணாமலையில் வரும் 14-ம் தேதி நடக்கவிருந்த 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வும், பிளஸ்2-க்கு கணிதத் தேர்வும் வினாத்தாள்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வினாத்தாள் வெளியானது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்திலும் இதுகுறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.