ஆசிரியர்:வ.ரா.(வ.ராமசாமி ஐயங்கார்)
பக்கங்கள்:160
ஆசிரியர் திரு.வ.ரா அவர்கள்
பாரதியாருடன் வாழ்ந்தவர்.எனவே வாசிக்க வாசிக்க நானும் பாரதியுடன் தொடர்ந்து பயனித்த அனுபவம் கிடைத்தது.பாரதியின் குணங்கள் மற்றும் நாம் அறிந்திடாத பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.பாரிதிக்கு உதவிய எத்தனையோ நல் உள்ளங்கள் நம் கண்களுக்கு தெரியாமலே இருந்தது.ஆசிரியர் அழகாக கண்முன்னே காட்சி படுத்தியது சிறப்பு.அதில் கிருஷ்ணசாமி செட்டியார் குறிப்பிடதக்கவர் .நிறைய செய்திகளை குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.இரண்டு நாள்களும் நான் பாரதியுடன் ஒரு பயவுணர்வுடன் வாழ்ந்தேன் என்று சொன்னால் அது மிகையாகாது.
பாரதியின் நிறைய கதைகளும்,கவிதைகளும் ,பாடல்களும் நமக்கு கிடைக்காமல் போனது பாரத தாயிக்கு பெரும் இழப்பு...நேரம் கிடைத்தால் மிண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்பது எனது ஆசை...நூல் பற்றி இருபது பக்கங்கள் கூறலாம் காலத்தின் அருமை கருதி முடிக்கிறேன்...நன்றிகள் பல ஆசிரியர் அவர்களுக்கு...