Breaking News :

Friday, April 19
.

உடல் ஆரோக்கியத்தை காக்கும் கோதுமை ரவை உப்புமா


என்னது உப்புமா என அந்தப் பெயரை கேட்டாலே முகம் துளிக்கும் சிலர், கண்டிப்பாக இந்த பதிவினை படிக்கவும். 

சம்பா ரவை என்று அழைக்கப்படும் கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த ஒன்றாக உள்ளது. இப்படி ஏராளமான ஆரோக்கியத்தை கொண்டுள்ள இந்த  கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி தயார் செய்வது என இப்போ பார்ப்போம்...

தேவையான பொருட்கள் :-

ஒரு கப் கோதுமை
ஒரு பெரிய வெங்காயம்
ஒரு தக்காளி
இரண்டு வரமிளகாய்
சிறிது இஞ்சி துண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
கடுகு – 1/2 டீஸ்பூன்
கொஞ்சம் பெருங்காயத்தூள்
தேவைக்கேற்ப கறிவேப்பிலை
தேவையான அளவிற்கு எண்ணெய்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :-

முதலில் அடிப்பை பற்றவைத்து, கடாயை வைக்கவும், அது சூடி ஏறியதும் கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு கிளறவும். தொடர்ந்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை அதில் இட்டு நன்கு வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும், அவற்றோடு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும். பின்னர் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கவும். இப்போ சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி.. இந்த உப்புவுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்ட மேலும் ருசியாக இருக்கும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.