Breaking News :

Wednesday, April 24
.

எண்ணெய் வழியும் முகமா? இதோ தீர்வு!


கோடைக்காலம் வந்துவிட்டது. இனி சருமம் வரண்டு, எண்ணெய் வடிந்துக்கொண்டே இருக்கும் இதனை எப்படி போக்குவது.. வாருங்கள் பார்ப்போம்

முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.

 தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும். முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை   குறையும்.

காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெரும். இந்த எளிய தீர்வுகளை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை சரித்து செய்து பொலிவான முகத்தை பெறமுடியும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.