Breaking News :

Friday, April 26
.

தலைமுடி கொட்டாமல் இருக்க டிப்ஸ்


1. தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வர, முடிஉதிர்தல் கட்டுப்படும். கூந்தலும் நன்கு வளரும்.

2. முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் (வாரம் ஒருமுறை) தொடர்ந்து மூன்று மாத காலம் குளிக்க முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

3. முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீகக்காய் போட்டு குளிக்க தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

4. செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து  தேய்த்துவர முடி உதிராது. கருமையாகவும் மாறும்.

5. சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க முடி உதிராது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.