Breaking News :

Thursday, April 25
.

சர்க்கரை நோய்க்கு ஆரைக்கீரையா?


ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை இரு வேளையும் மூன்று கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயானது கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்கும்

   இரத்தத்தில் உள்ள பித்தம் தணியும் இரத்த சர்க்கரையின் அளவானது கண்டிப்பாக குறைந்துவிடும்

  முக்குற்றங்களில் மாறுபாட்டால் பித்தம் அதிகரித்து அதன் விளைவாக ஏற்படும் உடல் உஷ்ணம் மற்றும் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் சர்க்கரை நோயின் பாதிப்பு இவைகள் மிக எளிதாக சம நிலைக்கு வந்து விடும்

  ஆரைக்கீரையை சமைத்து உண்டு வருவதால் மன அழுத்தம் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும் மேலும் வலிப்பு நோய் வராமல் இது நம்மை பாதுகாக்கும்

  ஆரைக்கீரையின் பொடியை பத்து கிராம் எடுத்து கால் லிட்டர் நீரிலிட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி இதனோடு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இதை காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவர அடங்காத சர்க்கரை நோய் அடங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்

மேலும்

  சர்க்கரை நோயால் வரும் அதிதாகம் பாத எரிச்சல் சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்

  கால் லிட்டர் பசும்பாலுடன் இதே அளவு தண்ணீர் சேர்த்து அதை பாதியாக சுண்டக் காய்ச்சி இதில் ஐந்துகிராம் ஆரைக்கீரை பொடியை கலந்து காலை வேளையில் தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகி வர நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் உடலுக்கு புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் ஏற்படும்

  ஆரைக்கீரையை பொடியாக செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது ஆரைக்கீரையை  சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலோ இதனால் உடல் சோர்வு குணமாகும்

மேலும் 
கை கால் நடுக்கம் மற்றும் கைகால் எரிச்சல் இவை அனைத்தும் நீங்கும் 

அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை வெகு எளிதாக தீரும் 

மலச்சிக்கல் விலகும் வயிற்றில் உள்ள பூச்சி மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும் 

கண் பார்வை நரம்புகள் பலம் பெற்று பார்வைத் திறன் அதிகரிக்கும்

 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சர்க்கரை நோய் வராமல் இருக்கவும் வந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஆரைக்கீரை நல்ல அருமருந்தாக அமையும்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.