சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

By Senthil

சென்னை திருவல்லிக்கேணி என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அங்குள்ள பார்த்தசாரதி கோவில் தான். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை சித்திரை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கோயில் நிர்வாகிகள் மற்றும் பணிகள் மட்டுமே கொண்டு இவ்விழா நடைபெற்றது. 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை சித்திரை பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. வருகிற 18ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20ந்தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் 4 மாட வீதிகளில் வலம் வந்து 9 மணிக்கு நிலையை வந்தடையும்.

23-ந்தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, 24-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. 25-ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.

.
மேலும்