திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து

By Senthil

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  கட்டண தரிசனம் ரத்து செய்யபட்டுள்ளது.  நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை முதல் 250 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம், 20 ரூ கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.  100 ரூபாய் கட்டண தரிசனம், மற்றும் பொது தரிசனங்களில் மட்டுமே  பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி இன்று முதல் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என திருச்செந்தூர் திருக்கோவில் இணை ஆணையர் குமரன் துறை இத்தகவலை தெரிவித்துள்ளார்.

.
மேலும்