ஸ்ரீதேவி துர்கா தேவி சரணம்

By Tejas

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய)

துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்

துன்பம் பறந்தோடும்

தர்மம் காக்கும் தாயும் அவளை

தரிசனம் கண்டால் போதும்

கர்ம வினைகளும் ஓடும்

சர்வ மங்களம் கூடும்(ஜெய )

பொற் கரங்கள் பதினெட்டும்

நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்

நெற்றியிலே குங்கும பொட்டும்

வெற்றி பாதையை காட்டும்

ஆயிரம் கரங்கள் உடையவளே

ஆதிசக்தி அவள் பெரியவளே

ஆயிரம் நாமங்கள் கொண்டவளே

தாய்போல் நம்மை காப்பவளே (ஜெய)

சங்கு சக்கரம் வில்லும் அம்பும்

மின்னும் வாளும் வேலுடன் சூலமும்

தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மாதா...

சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்

திங்களை முடி மேல் சூடி நின்றாள்

மங்கள வாழ்வும் தந்திடுவாள்

மங்கையர்க்கரசியும் அவளே

அங்கயற்கண்ணியும் அவளே (ஜெய..)

அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி

.
மேலும்