ஸ்ரீ சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில். குருவித்துறை, சோழவந்தான். மதுரை.

By saravanan

விஷுக்கனி வாழ்த்துக்கள்.

இனிய ஸ்ரீ க்ரோதி வருட இனிய  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இறையருளால்

நிறைந்த வளம் , நிறைந்த ஆரோக்கியம் , மிகுந்த மகிழ்ச்சி , வெற்றி , இவற்றையெல்லாம் இந்த இனிய தமிழ் புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.

அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில்.

அத்தி வரதர் எப்படி மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு பெற்றுள்ளாரோ, அதே போல் இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் சந்தன மரசிலையால் ஆன மூர்த்தியாக திகழ்கின்றார். குருவுக்கு உகந்த திருத்தலமாகத் திகழ்கின்றது.

குருவின் பிரார்த்தனையால், ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று, சித்திரத் தேரில் எழுந்தருளுகிறார். இதன் காரணமாக சித்தரரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகின்றார்.

.

.
மேலும்